திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழின் எழுச்சி-1


செம்மொழிச் செம்மல்கள் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறார் செம்மல் (கோவிந்தன்)

வணக்கம். '"தமிழைத் தமிழாக்குவோம்" திட்டங்கள் : 1.நேரில் கூடிப் பேசலாம். 2. திட்ட வரையறை தேவை. 3. முதலில் தமிழ்மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குவன பற்றி மட்டுமே எடுத்துக் கொள்வோம். 4. நன்னன் ஐயாவின் வழியில் - வழிகாட்டுதலில் - தமிழ் மொழி வழக்கில் - பேச்சு வழக்கில் - எழுத்து வழக்கில் அன்றாடம் காணும் பிழைகளைக் களையும் கருத்துக்களைப் பரப்புவோம். 5. தமிழ்வழிக்கல்வி பற்றிய கருத்துப் பரப்பலையும் மேற்கொள்ளலாம். என் வலைப் பூ, ஆய்வுத் தமிழ் குழு ஆகியவற்றைக் காண்க! அன்பிலே,
முனைவர் பா.இறையரசன் 9840416727
***********************************************************************************************************************************************************************************************************

தமிழின் எழுச்சி என்ற வலைப் பூவில் அதன் ஆசிரியர் கோவிந்த கண்ணன் கட்டுரை -1

இன்றைய சூழலில் என்ன இது தமிழின் எழுச்சி காண்போம் என்கிறாரே என்ற ஐயம் ஏற்படுவது

இயல்புதானே! வெளிப்பகையாலும் உட்பகையாலும் தாய்த் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அச்சம்

கொள்ள வைக்கிறதே!
என் செய்வது ? இதற்கு விடைதான் வலைப்பூவின் தலைப்பு !


வெளிப்பகை :
ஆப்பிரிக்காவுக்கும், பிரிட்டிஷ் கயானவுக்கும் , அடிமைகளாக அனுப்பப்பட்ட தமிழர் இன்று தம் இன

அடையாளம் இழந்ததை மறக்க முடியாது. பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட தமிழர் நிலையும்

அவ்வண்ணமே! மற்றும் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழரை அழித்தொழித்து, பிஞ்சுக்
குழந்தைகளும், பெண்டிரும்,முதிர்வடைந்தோரையும் பாகுபாடின்றி கன- ரக ஆயுதங்களைக்கொண்டு

சென்ற ஆண்டு பொசுக்கி மகிழ்ந்தனரே ! சாஸ்திரி - சிறிமாவோ இணைந்து இலங்கைத்

தேயிலைத்தோட்ட தமிழ்த் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பினார்களே ! பம்பாயிலிருந்தும்,

அருகிலே பங்களுருவிலிருந்தும் தமிழர்கள் உதைத்து விரட்டப்பட்டார்களே !

உட்பகை :

உட்பகையால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் வந்த ஆபத்து , தமிழ் கலந்த ஆங்கிலமாக,

இல்லை இல்லை ஆங்கிலமும் சிறிது தமிழும் பேசும் நிலை இன்று உள்ளது. நமது வீட்டிற்குள்ளும்

தொலைக்காட்சி வழியே வந்தும் விட்டது. தமிழ் பேசும் அனைவர் ஒற்றுமை கருதிப் பிற உட்பகை

பற்றி கூறாது விடுகிறேன். பின் எவ்வாறு தமிழ் இன்றளவும் வாழ்கிறது ? "தமிழினி மெல்லச்சாகும்

என்றவன் பேதை!" என்றானே மீசைக் கவி ? அவன் கூறி 80 - ஆண்டுகள் சென்றும் பாரதி

சொன்னது உண்மைதானே ! இன்னும் சாகவில்லையே ! ஏன் ? தமிழின் வலிமைதான் காரணம் ஆகும்.

தமிழ் நாட்டு வரலாறு மறைக்கப்படும் அவலம் :

தமிழ் நாட்டுவரலாறு நம் தமிழர் உலகின் தொல்குடியாய் இருந்தும் நம் பள்ளிகளிலும், ஏன்

கல்லூரிகளின் வரலாற்றுப் பட்டப்படிப்பிலும் கூட ( சில பல்கலைக்கழகங்கள் தவிர) மறுக்கப்படும்-

மறைக்கப்படும்- அவலநிலை இன்றும் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக